திருச்சியை உலுக்கிய மாணவியின் மரணம்… “கலெக்டர் ஆபீஸில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை”… திடீரென போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள்…!

Spread the love

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி, சக செவிலியர்களும் மாணவிகளும் தங்களது சக தோழியின் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, மாணவியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம், ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த விசாரணைக் குழுவிற்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் என். பாஸ்கர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர்களான எம். பாரதி மோகன், பி. சண்முகசுந்தரம் (மயக்கவியல்) மற்றும் என். ஜெயபிரகாஷ் (மருத்துவம்) ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி செவிலியர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடித்தது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட 10 பேரை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட சுமுகமான சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினர் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Nanthini

Recent Posts

“ஃபைல்ஸ் எங்கே.. உடனே எடுங்க”… விஜய்யின் ‘ஆக்ஷன்’ லிஸ்டில் இருக்கும் அந்த 3 விஐபிக்கள் யார்?… கசிந்தது லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியம்…!

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…

2 minutes ago

“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…

5 minutes ago

“தனி அறையில் இருந்த சிறுமி”… அந்தரங்க உறுப்புகளை தொட்டு முத்தமிட முயன்ற Boxing coach… விளையாட்டு உலகையே உலுக்கிய கொடூரம்…!

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற காண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் தனியார் குத்துச்சண்டை கிளப்பில், 17 வயது இளம் வீராங்கனைக்கு…

8 minutes ago

லாரியில் வைத்து சிறுமியை சீரழித்த அண்ணன் – தம்பி… மனைவியே கூட்டிக்கொடுத்த கொடூரம்… கணவனுக்கு மனைவி செய்யும் காரியமா இது…?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, ஓடும் லாரியில்…

12 minutes ago

என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க!”… காதலியின் வீட்டின் முன் பிணமாகக் கிடந்த காதலன்… கதறும் பெற்றோர்.. ராஜஸ்தானில் அரங்கேறிய ஆணவக் கொலை”..!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி…

16 minutes ago

நடுரோட்டில் சட்டையை பிடித்து குப்பைத் தொட்டியில் வீசிய டிரம்ப்! அமெரிக்க அதிபரின் பகீர் AI வீடியோ.. உலகளவில் பெரும் அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை…

21 minutes ago