அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தால் அந்நாடு தனது வான் எல்லையை அதிரடியாக மூடியுள்ளது. அணுகுண்டு தயாரிப்பதற்காக ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. சர்வதேச அளவில் எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து ஏப்ரல் தொடக்கத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டாலும், தற்போது அந்த அமைதிச் சூழல் முற்றிலுமாக சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 24 மணி நேரக் கெடு முடிவடைய உள்ளதால் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக அதிபர் ட்ரம்ப் தனது வார இறுதி நியூ ஜெர்சி பயணத்தை அவசரமாக ரத்து செய்துவிட்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். ஈரான் மீது புதிய சுற்று ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாகத் தயாராகி வருவதாக அமெரிக்காவின் பிரபல ‘சிபிஎஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடத்துவது குறித்த இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களையோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையோ ஒருபோதும் வைத்திருக்கக் கூடாது என்பதில் ட்ரம்ப் மிகத் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா முன்வைக்கும் பேச்சுவார்த்தை உடன்பாடுகளுக்கு ஈரான் பணிய மறுத்தால், அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது உட்பட அனைத்து வழிகளும் ட்ரம்பின் வசம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வந்த நீண்ட கால அமைதிக்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததே இந்த திடீர் திருப்பத்திற்கு முக்கியக் காரணமாகும்.
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரானும் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தங்கள் நாட்டின் மீது மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தத் துணிந்தால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் உள்ளடக்கிய பெரும் போராக மாறும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது. எதிரிகளின் எந்தவொரு முட்டாள்தனமான நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கத் தங்களது ஆயுதப் படைகள் முழு வீச்சில் தயாராக இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.
உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…
"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…
ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ்…
தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…