இந்தியாவில் தினம்தோறும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். காரணம் சிலருக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கின்றது, இன்னொன்று ரயிலில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதனால் ஏழை மக்கள் நடுத்தர மக்கள் என பலரும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றன. ரயில் பயணங்களில் நிறைய வசதிகளும் இருக்கின்றன. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் பணம் செலுத்தும் நேரம் வரை மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தில் சீட்டுகள் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான், இதில் இந்திய ரயில்வே சில மேம்பாட்டுகளை செய்து வருகிறது.
ரயிலில் பயணிப்போருக்கு இருக்கைகள் (பெர்த்) தொடர்பான சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், மிடில் பெர்த் என மூன்று வகை பெர்த்கள் உள்ளன. என்னதான் ரயில் பயணம் மேற்கொண்டாலும் ரயிலில் உள்ள விதிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை அதில் ஒன்று நம் இருக்கையில் எப்போது தூங்கலாம் எப்போது தூங்கக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் இருக்கையில் தூங்கலாம். அதாவது உங்களிடம் மேல் இருக்கை இருந்தால் நீங்கள் தூங்குவதற்கு எந்த நேர வரம்பும் இல்லாமல் தூங்கலாம், பகல் நேரத்தில் கூட தூங்கலாம் உங்களை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. பகலில் நீங்கள் கீழ் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீங்கள் உங்களுடைய மேல் பெர்த்தில் தான் தூங்க வேண்டும். அப்போதுதான் கீழ்ப்பெர்த்தில் உள்ளவர்கள் தூங்க முடியும்.
நடுபெர்த்தில் உள்ளவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான் தூங்க வேண்டும். நீங்கள் பகலில் கீழ்பெர்த்ல் தான் அமர வேண்டும். உங்கள் நடுபெர்த்தை திறக்கக் கூடாது.பகல் நேரத்தில் மிடில் பேத்தை நீங்கள் மேல் நோக்கி மடக்கி வைப்பது அவசியம். ஒருவேளை நீங்கள் தூங்க வேண்டுமானால் கீழ்பெருத்தில் இருக்கும் பயணியிடம் ஒப்புதல் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது. இனி ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் விதிமுறைகளை அறிந்து அதன்படி செயல்படுங்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…