இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் பி.எம் கிசான் திட்டத்தைப் போல இப்போது மாநில அரசும் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசு ஒரு திட்டத்தை எடுத்துள்ளது. புதிய விவசாயிகளுக்காக கிரெடிட் கார்டுகளை வழங்க உள்ளதாம்.
2025- 26 நிதியாண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்காக கிரெடிட் கார்டு திட்டத்தை நிர்ணயிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதை விரிவாக்கம் செய்யவுள்ளது. 2024- 25 ஆம் ஆண்டில் இதுவரை 71 லட்ச விவசாயிகளுக்கு கிரெடிட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளை அம்மாநில அரசு திட்டத்தின் கீழ் இணைக்க உள்ளதாம்.
இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை கடன்கள் தரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. இதுவரை விவசாயிகள் கிஷான் கிரெடிட் கார்டு மூலம் 3லட்ச ரூபாய் கடனை பெற்று வந்துள்ளன. இதை அதிகரித்து 5 லட்சமாக தர முடிவெடுத்துள்ளனர். அதற்கான வேலைகளும் செயல்பாட்டில் உள்ளது. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்காக நவீன விவசாய உபகரணங்களும், மேம்பட்ட விதைகளும், உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் வழங்க திட்டம் வரப்போகிறது.
உத்திரப்பிரதேச மாநில அரசு திட்டத்திற்கு தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், முகவரி சான்று, நில உரிமைச் சான்று மற்றும் பயிர் விவரங்கள் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்தில் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இது மட்டும் இல்லாமல் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்கும் விவசாயிக்கு ரூபாய் 1.60 லட்சம் அல்லது ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் கடன் இருந்தால் அதற்கான ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
கிஷான் கிரெடிட் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் மேல் உள்ள விவரங்களில் இருக்கும் அனைத்து படிவங்களையும் சம்பந்தப்பட்ட வங்கியின் வலைத்தளத்தில் நுழைந்து ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் வங்கி கிளைகளுக்குச் சென்று அதற்கான படிவத்தை வாங்கி தகவல்களை நிரப்பி ஆவணங்களை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் இதில் விவசாயிகளின் தகுதிக்கேற்ப கிரெடிட் கார்டு வழங்கப்படும்..
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…