போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு….! மார்ச் 15-க்குள் இதைச் செய்யத் தவறாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 15,300-க்கும் மேற்பட்ட பயனாளிகள், தங்களது 2026-ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வூதியதாரர்கள் வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் 15-ஆம் தேதிக்குள் தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்க வேண்டும்.

இதற்காக அவர்கள் கடைசியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பணிமனைகள் அல்லது தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக, வியாசர்பாடி ஊழியர்கள் மாதவரத்திலும், பெசன்ட் நகர் ஊழியர்கள் அடையாறு பணிமனையிலும் சான்றிதழ் அளிக்கலாம் என இடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

   

நேரில் வர இயலாதவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் ‘TNS-103’ இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு ஓய்வூதிய ஆணை, ஆதார் அட்டை, வங்கிப் புத்தகம் மற்றும் கைபேசி எண் ஆகியவை அவசியமாகும்.

   

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், கூடுதல் தகவல்களுக்கு 044-2345 5801 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக தலைமையகத்திலேயே சான்றிதழை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.