“அரசு பேருந்துகளில் இனி இது நடக்காது… பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய ரூல்ஸ்.. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?.. போக்குவரத்து கழகத்தின் அதிரடி எச்சரிக்கை”…!!

By Muthu Mani on வைகாசி 19, 2026

Spread the love

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கும், அதனைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அண்மைக்காலமாக ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசுவதால் கவனச்சிதறல் ஏற்பட்டு, கடுமையான சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் உன்னத நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவை நடைமுறைப்படுத்த ஏதுவாக, வழித்தடங்களில் அதிகாரிகள் மூலம் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திடீர் சோதனைகளின்போது, எந்தவொரு அரசுப் பேருந்து ஓட்டுநராவது விதியை மீறி கைப்பேசி வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. பயணிகளின் உயிரோடு விளையாடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதை இந்த உத்தரவு காட்டுகிறது.