BREAKING: நாடு முழுவதும் நாளை முதல் கட்டணம் உயர்வு…. அரசு வெளியிட்டது….!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

நாளை முதல் இந்தியாவில் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. கூடுதல் ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்க உள்ளது. இந்தியாவில் டிசம்பர் 26 நாளை முதல் புதிய கட்டண கட்டமைப்பை இந்திய ரயில்வே அமல்படுத்துகின்றது. இதன் மூலமாக 600 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் ரயில்வே எதிர்பார்க்கிறது. சாதாரண வகுப்பு பயணிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதலாக வசூல் செய்யப்படும்.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா கூடுதல் வசூலிக்கப்படும். 215 கிலோ மீட்டருக்கு குறைவான பயணங்களுக்கு கட்டண உயர்வு கிடையாது. 500 km தூரம் செல்லும் சாதாரண வகுப்பு பயணிகளுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்தவில்லை.