பொங்கல் பண்டிகை…! 10 நிமிடங்கள் தான்…! ஜெட் வேகத்தில் நிறைவு பெற்ற டிக்கெட் முன்பதிவு….!!

By Devi Ramu on கார்த்திகை 15, 2025

Spread the love

பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் விற்பனை 10 நிமிடங்களில் 90% நிறைவு பெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ஆம் தேதி ரயில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  இந்த நிலையில் சுமார் 10 நிமிடங்களிலேயே சாதாரண வகுப்பு கொண்ட ரயில்களில் டிக்கெட் நிறைவடைந்தது. உயர் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் மட்டும் டிக்கெட்டுகள் உள்ளது.