தமிழகத்தில் அடுத்தவாரம் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறை வருகிறது. இதனையொட்டி பயணிகளை கண்காணிப்பதற்காக தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் இதற்காக 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
