இன்று முதல் இந்தியாவில் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. கூடுதல் ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்க உள்ளது. இந்தியாவில் டிசம்பர் 26 இன்று முதல் புதிய கட்டண கட்டமைப்பை இந்திய ரயில்வே அமல்படுத்துகின்றது. இதன் மூலமாக 600 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் ரயில்வே எதிர்பார்க்கிறது. சாதாரண வகுப்பு பயணிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதலாக வசூல் செய்யப்படும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா கூடுதல் வசூலிக்கப்படும். 215 கிலோ மீட்டருக்கு குறைவான பயணங்களுக்கு கட்டண உயர்வு கிடையாது. 500 km தூரம் செல்லும் சாதாரண வகுப்பு பயணிகளுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்தவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத்…
மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம்…
உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி…
தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகை குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட்…