FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப் பொலிரோ காரில் சென்ற பக்தர்கள், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த பயங்கர மோதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கோயில் வழிபாட்டிற்காகச் சென்ற ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.