தமிழகத்தில் சுமார் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் 631 தீயணைப்பு வீரர்கள், 180 சிறை காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 22 நாளை தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் ஒன்பதாம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற https://www.tnusrb.tn.gov.in இணையதள பக்கத்தை அணுகவும்.
