தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான பல வியூகங்களை வகுத்து வருகிறது. தேமுதிக, பாமக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் நாளை கோவை வரும் பிரதமர் மோடியை இபிஎஸ் சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பிரதமர் மோடியை இபிஎஸ் சந்தித்து பேச உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் மற்றும் தமிழகத்தில் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிகப்படலாம் என்று தெரிகிறது.
