திருப்பதி பக்தர்களே ரெடியா இருங்க… இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது தரிசன டிக்கெட்…!

By Nanthini on ஆடி 24, 2025

Spread the love

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சென்று வருகின்றனர். அதனால் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பக்தர்களின் நலனுக்காகவும் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு கிடைக்கும். திருமலை மற்றும் திருப்பதிக்கான அறை ஒதுக்கீடு பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும். தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.