தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியாவது இந்த முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார். இதனால் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதேசமயம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து பல வாக்குறுதிகளையும் இபிஎஸ் அள்ளி வீசி வருகிறார்.
இப்படியான நிலையில் கூட்டணிக்கு இ பி எஸ் கூவி கூவி அழைக்கிறார், ஆனால் யாரும் வரவில்லை என்று துரைமுருகன் கூறியதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். உங்களின் கூட்டணி எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது உடையும் என்றே தெரியவில்லை. அதை முதலில் பாருங்கள் என்ற இபிஎஸ், அதிமுக என்பது ஐஎஸ்ஐ மாதிரி, தனி முத்திரை உள்ள கட்சி என்று தெரிவித்துள்ளார்.
