பொங்கலுக்கு பளபளப்பான வெல்லம் வாங்குறீங்களா…? அப்போ இது உங்களுக்குத்தான்….! கலப்படத்தை கண்டறிய சூப்பர் டிப்ஸ் இதோ…!!

By Devi Ramu on தை 9, 2026

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற ஆபத்தான பொருட்கள் கலக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. வெல்லம் பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எடையை அதிகரிக்கச் சேர்க்கப்படும் சர்க்கரை போன்றவை உடல்நலத்திற்குப் பெரும் தீங்கினை விளைவிக்கும். இத்தகைய கலப்பட வெல்லத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டலக் கோளாறுகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாங்கும் வெல்லம் சுத்தமானதுதானா என்பதை அறிய, ஒரு துண்டு வெல்லத்தை நீரில் போட்டுப் பார்க்க வேண்டும்.  தூய வெல்லம் மெதுவாகக் கரையும், ஆனால் கலப்படம் இருந்தால் நீர் மங்கலாகி அடியில் கழிவுகள் தங்கும். கரும்பின் இயற்கையான மணம் இல்லாமல் ரசாயன வாடை அடித்தாலோ அல்லது அளவுக்கு அதிகமான வெளிர் நிறத்தில் இருந்தாலோ அந்த வெல்லத்தைத் தவிர்ப்பது நல்லது. பொதுமக்கள் தரமான வெல்லத்தை அடையாளம் கண்டு வாங்க வேண்டும் என்றும், முறைகேடாகக் கலப்படம் செய்பவர்கள் குறித்து அதிகாரிகளுக்குப் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.