ஆசிய கோப்பை கிரிக்கெட்: “அன்று உண்மையில் இதுதான் நடந்தது” 1 மணி நேரம் காத்திருந்தோம்… புது விளக்கம் கொடுத்த திலக் வர்மா..!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானில் வைத்து இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்விஇடமிருந்து கோப்பை பெற இந்தியா மறுத்தது. இதனை அடுத்து அந்த கோப்பையை கொண்டு சென்றார் நக்வி. பின்னர் இந்த கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த நக்வி கோப்பையை  நான் தான் வழங்குவேன் என்றும் நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கும் நிகழ்ச்சி வைத்திருப்பதாகவும் தவறாமல் இந்திய அணி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்பாக அன்றைய இறுதி போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா  என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதாவது நாங்கள் உண்மையில் ஒரு மணி நேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளை பார்த்தால் தெரியும். நான் தரையில் படுத்திருப்பேன். மீதம் உள்ளவர்களும் தரையில் படுத்து இருந்தார்கள். நாங்களும் காத்திருந்தோம். கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

   

நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூரியகுமார் யாதவ்  தலைமையிலான இந்திய அணி கோப்பையை பெறப்போவதில்லை என்பதை நாங்கள் தெரிந்ததும் அர்ஷிப் சிங் தான் ஒரு ஐடியா கொடுத்தார். கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று கூறினார். உடனே நாங்கள் அதற்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் தான் கோப்பை இல்லாமல் கொண்டாடினோம் என்று கூறியுள்ளார்.