புஸ்ஸி ஆனந்த் இடத்திற்கு வரும் முக்கிய புள்ளி… விஜய் எடுத்த திடீர் முடிவு… தவெகவில் வெடித்த பூகம்பம்…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் கீழே தள்ளிவிட்டு அவரது இடத்திற்கு ஜான் ஆரோக்கியசாமி வர முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவாக இருந்த ஆனந்த் வெளியே வந்த பிறகும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை ஜான் ஆரோக்கியசாமி தான் நடத்தி வருகின்றார். அடிமட்ட தொண்டர்களிடையே அவருடைய செல்வாக்கும் அதிகரித்துள்ளது. ஆனந்துக்கும் ஜானுக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜான் ஆரோக்கிய சாமியின் செயலால் ஆனந்த் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.