#image_title
தென் இந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி இவர் நடித்து வருகிறார். தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியதன் மூலம், தமிழ் ஆடியன்ஸை கவர்ந்திருந்தார்.
#image_title
இந்தப் படத்தில் இவரின் எதார்த்த நடிப்பும், காமெடியும், இளசுகளின் மனதை கவர்ந்தது எனலாம். அதனை தொடந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் நடித்திருந்தார் பிரியங்கா. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கைவசம் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
#image_title
இதற்கிடையில், அவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எடுக்கப்பட்ட டிக் டாக் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தினுடைய டிரைலரை பார்த்து அதிர்ந்து போயினர் பிரியங்காவின் ரசிகர்கள். எந்த படத்திலும் இல்லாத அளவு, படுக்கை அறை காட்சிகளில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருந்தார் பிரியங்கா. கடந்த மாதம் 28-ம் தேதி இப்படம் வெளியான நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படக்குழு இப்படத்தை பார்த்துள்ளனர். அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த 20 நிமிட காட்சிகள் இல்லாததை கண்டு படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
#image_title
சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் அந்த காட்சிகள் மாயமாகி இருந்ததால் படக்குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டடு, தற்போது நீதிமன்றத்தை நாடவுள்ளதாக படத்தின் இயக்குநர் மதன் குமார் கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை அணுகிய போது, தொழில் நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து விட்டதாக கூறியதாகவும், ஆனால் அதனை ஏற்க மறுத்து, தற்போது வக்கீல் நோட்டிஸ் அனுப்பவுள்ளதாகவும் மதன்குமார் தெரிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…