“தப்பிச்சு ஓடிரு கைப்புள்ள” தரைக்கு வந்த முதலையை குறிவைத்த புலி… ஒரு செகண்ட் தவறி இருந்தால் காலி… புலியிடமிருந்து நீர் அரக்கன் தப்பித்த திக் திக் வீடியோ..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

காட்டில் சிங்கம், புலிகளுக்கு நிகராகத் தண்ணீரில் முதலைகள் மிகவும் ஆபத்தானவை. அதனால்தான் அவை ‘நீர் அரக்கர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆற்றங்கரையில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு புலி, முதலையை வேட்டையாடத் திட்டமிட்டு அதன் மீது மின்னல் வேகத்தில் பாய்கிறது. நிலத்தில் புலியின் வேகம் மற்றும் பலத்திற்கு முன்னால் முதலையால் ஈடுகொடுக்க முடியாது என்பதால், அங்கு ஒரு பெரும் போர் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

   
View this post on Instagram

 

A post shared by @official_ranthra

ஆனால், புலியின் பிடியில் சிக்காமல் இருக்க அந்த முதலை உடனடியாகத் தண்ணீருக்குள் குதித்துத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. முதலையைத் துரத்திப் புலி ஆற்றில் குதித்திருந்தால், அது முதலையின் இரையாக மாறியிருக்கும் என்பதால் புலி அங்கேயே நின்றுவிட்டது. நிலத்தில் ஒரு வேட்டைக்காரனும், நீரில் ஒரு வேட்டைக்காரனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்தச் சிலிர்ப்பூட்டும் வீடியோ இணையத்தில் பலரையும் திகைக்க வைத்துள்ளது.