திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 69 வயது சுப்புலட்சுமியின் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணின் 25 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். சுப்புலட்சுமியின் உறவினரான சிவகலா (51), மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயலூர் முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, பாலக்கரையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் சிவலோகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவருடைய தாயார் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாலசுப்ரமணியம் மற்றும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமி, சிவகலா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…