“என்னை காப்பாத்துங்க…” மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 3 பேர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on சித்திரை 25, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியைக் காரில் கடத்திச் சென்று இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், சிறுமியைத் தவறாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு குற்றவாளிகள் மிரட்டல் விடுப்பதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பலத்த பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.