தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திமுக மூன்று முக்கிய நிபந்தனைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைச் சமமாக 50 சதவீதம் உயர்த்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை இந்த மசோதாவிலேயே தெளிவாகக் குறிப்பிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தூது அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யவே இத்தகைய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
