விடுபட்டவர்களுக்கு இன்று மீண்டும் வாய்ப்பு…! பொங்கல் பரிசு மற்றும் ரூ.3,000 வாங்காதவர்களுக்க தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on தை 20, 2026

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறத் தவறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்றும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 3 சதவீதத்தினருக்கும் இது முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பயணக் காரணங்களாலோ அல்லது பிற சூழல்களாலோ இதுவரை பொங்கல் தொகுப்பைப் பெறாதவர்கள், தங்களுக்குரிய ரேஷன் கடைகளை அணுகி இன்று பெற்றுக் கொள்ளலாம். அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிக்கவும், எவ்விதப் புகாருமின்றி விநியோகத்தை முடிக்கவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.