BREAKING: இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி… தவெகவில் இணையப் போகிறாரா சி.வி.சண்முகம்?…. காலையில் நடந்த பரபரப்பு சந்திப்பு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நிலவும் முரண்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் ‘தமிழக வெற்றி கழகத்தில்’ இணையப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், இன்று காலை அவர்கள் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், தொகுதி தொடர்பான மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கவே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறி, கட்சி மாறும் செய்திகளுக்கு மழுப்பலாகப் பதிலளித்துச் சென்றுள்ளார். எனினும், உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருக்கும் சூழலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக நிர்வாகியைச் சந்தித்திருப்பது, புதிய அரசியல் கூட்டணிக்கான திட்டமா அல்லது வெறும் மக்கள் கோரிக்கைதானா என்ற விவாதத்தை எழச்செய்துள்ளது.