மலைச்சரிவில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு நாயை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர் ஒருவர் முதுகில் சுமந்து மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதநேயம் குறைந்து வருவதாகக் கருதப்படும் இக்காலத்தில், வாயில்லா ஜீவனுக்காக அந்த நபர் காட்டிய இந்த அதீத அன்பு, ‘மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது’ என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. ‘தி அடல்ட் சொசைட்டி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ள இந்தக் காட்சி பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.
அந்தக் காணொளியில், செங்குத்தான மற்றும் ஆபத்தான மலைப்பாதையில் ஒரு நபர் தனது முதுகில் ஒரு பெரிய துணிக்கட்டைச் சுமந்தபடி மிகுந்த சிரமத்துடன் ஏறிச் செல்கிறார். அந்தத் துணிக்கட்டிற்குள் காயமடைந்த ஒரு நாய் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு சிறிய தவறு நடந்தால் கூட மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ள அந்தச் சூழலில், பல மைல் தூரம் அந்த நாயைச் சுமந்து கொண்டு அவர் மலையில் ஏறிய விதம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “விலங்குகளின் வலியை உணர்ந்து செயல்படும் இவரைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் அழகாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். காயமடைந்த அந்த நாயைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட இந்தத் துணிச்சலான முயற்சி, உண்மையான வீரத்திற்கும் கருணைக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
