SK21 படத்துக்கு அமரன்-னு பெயர் வைக்க இதுதான் காரணம்.. கமல் இப்படி ஒரு செண்டிமெண்ட் வச்சிருக்காரா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

amaran

#image_title#image_title

   

தற்பொழுது இவர் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்கே 21 படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று ரிலீசாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த டீசர் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று வரிகளுடன் வெளியாகி முழுக்க, முழுக்க ஆக்சன் உடன் கூடிய பக்கா திரில்லராக வெளிவந்துள்ளது.

இதுவரை நாம் சிவகார்த்திகேயனை பார்க்காத கோணத்தில் இத்திரைப்படத்தில் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி .  இத்திரைப்படத்துக்கு ‘அமரன்’ அதாவது அழிவில்லாதவன்  என்று பெயரிட்டுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி .  இத்திரைப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. அமரன் என்ற பெயரை கேட்டதும் நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் தான்  நமது ஞாபகத்திற்கு வந்திருக்கும்.

1992 இல் வெளிவந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. தோல்வியான படத்தின் டைட்டிலை கமல் எப்படி ஓகே செய்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதாவது 2022-ல் வெளிவந்த லோகேஷ் மற்றும் கமலின் விக்ரம் பழைய விக்ரம் அடைந்த தோல்வியை சரி செய்து பல மடங்கு லாபத்தை சம்பாதித்தது.  அதேபோல முதலில் தோல்வியை நவரச நாயகன் கார்த்திக்கின் அமரன் பெற்றிருந்தாலும், தற்பொழுது வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற நோக்கத்தில் கமல் சென்டிமென்டாக இந்த படத்தின் தலைப்புக்கு ஓகே சொல்லிவிட்டாரோ..? என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.