Categories: சினிமா

சன் டிவி போட்ட கண்டிஷன்.. எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய இதுதான் காரணம்.. உண்மையை கூறிய அப்பத்தா..!

Spread the love

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர காரணம் என்ன என்பது குறித்து அந்த சீரியலில் நடித்த பாம்பே ஞானம் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பல சீரியல்களை இயக்கி புகழ் பெற்றவர் தான் இயக்குனர் திருச்செல்வம். கோலங்கள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் பல சீரியல்களை இயக்கியிருக்கின்றார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்கிய சீரியல் தான் எதிர்நீச்சல். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மிகவும் பரபரப்புடன் இந்த சீரியலை இயக்கி வந்தார். சீரியல் தொடங்கிய இரண்டு வாரத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் 3 பட்டியலில் நுழைந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்ட ஒருவரின் பிடியிலிருந்து பெண்கள் எப்படி வெளிவர வேண்டும் எப்படிப்பட்ட சவால்களை சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு சில விமர்சனங்கள் எழுந்த போதிலும் பலரின் ஃபேவரிட் சீரியலாக இருந்து வந்தது.

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வந்தார் அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தவர் ஆதிகுணசேகரன். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லனை கூட நேசிக்க முடியும் என்பது இவரை பார்த்து தான் தெரிந்தது . அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரின் உயிரிழப்புக்கு பிறகு அந்த சீரியல் சற்று தொய்வை சந்தித்தது. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு வரவேற்பு பெறாத காரணத்தினால் ஜூன் எட்டாம் தேதி இந்த சீரியலை முடித்துவிட்டார் இயக்குனர் திருச்செல்வம். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று இருக்கு பேட்டி அளித்திருக்கும் நடிகை பாம்பே ஞானம் கூறியதாவது: “இந்த சீரியல் துவங்கும்  போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

குறிப்பாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவை அனைவரும் ரசித்து வந்தார்கள். மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் சீரியல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். மிகக் கூறியகிய காலத்திலேயே இந்த சீரியல் முடிவடைந்து விட்டது.

இந்த சீரியல் முடிவடைய மற்றொரு முக்கிய காரணம் சில மாதங்களாக சீரியலில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட சரிவும்தான். அதுமட்டுமில்லாமல் சேனல் தரப்பிலிருந்து சீரியலை வேறு நேரத்தில் மாற்ற சொன்னார்கள். ஆனால் இயக்குனர் திருச்செல்வத்துக்கு அது ஏற்றதாக இல்லை என்ற காரணத்தினால் இந்த சீரியலை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

42 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

45 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago