திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பக்கத்தில் பத்து வயது சிறுமியை தூக்கிச்சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையில் ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே அந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். முதல் கட்ட விசாரணையில் அவன் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
