ஆணவக் கொலையை மையமாகக் கொண்ட ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சினிமாவில் நிலவும் வன்முறை மற்றும் கவர்ச்சிக் கலாசாரம் குறித்துப் பேசினார்.
“வன்முறை இல்லாமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், திருநெல்வேலி என்றாலே அரிவாளும் வன்முறையும் தான் என்ற பிம்பம் உருவாக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், அங்குள்ள அறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் சிறப்புகளைத் திரையுலகம் கண்டுகொள்வதில்லை என்றும் ஆதங்கப்பட்டார். நூறு பேரை அடித்து வீழ்த்தும் ரவுடியிசத்தை ஹீரோயிசமாகக் காட்டுவதை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர் வன்முறைக் காட்சிகள் பொதுமக்களிடையே அதைச் சாதாரணமானதாக மாற்றுகிறது.
மேலும், குத்துப்பாட்டு, நெருக்கமான காதல் மற்றும் கவர்ச்சிக் காட்சிகள் மட்டுமே வியாபார உத்தி என்ற வரையறையை உடைக்க வேண்டும். வீரம் என்பது அரிவாளைத் தூக்குவது அல்ல; நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படி வாழ்வதே உண்மையான வீரம். இறுதியாக, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை, ஆனால் அவரது அரசியல்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மையமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, புரட்சிக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…