இந்த 5 காரணத்துக்காக கண்டிப்பா புஷ்பா-2 பார்க்கலாம்… ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீண் போகல..!..!

By Soundarya on மார்கழி 6, 2024

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. ஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தத் திரைப்படம்  நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி இன்று டிசம்பர் 5 வெளியாகிவிட்டது. படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.  இந்நிலையில் படம் பார்த்தவர்கள் இந்த ஐந்து காரணத்திற்காக படத்தை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். அது என்னவென்று பார்க்கலாம்.

   

புஷ்பா முந்தைய பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அந்த காட்டுக்கு ராஜா வாகி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், பகத் பாஸில் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். முதல் பாகத்தில் இவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். அது வீண் போகவில்லை என்பது போல ஒவ்வொரு நடிகரும் அவர்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.

   

 

இந்த படத்தில் தயாரிப்பு பணி ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாக படத்தின் மீது ஒரு ஹைப்பை கொடுத்தது முதல் பாகத்தைப் போல பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளும் புஷ்பா 2 வில் உள்ளத. இதில்  வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரியாக பகத் பாசிலின் நடிப்பை பார்க்க அனைவராலும்  ஆர்வமாக இருக்கிறது.

முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா தான். பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் சமந்தாவின் நடனம்  தான். முதல் பாகத்தைப் போல புஷ்பா 2 படத்திலும் கிஸ்ஸிக் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இந்த பாடலை தியேட்டரில் பார்ப்பதற்காகவே அனைவரும் வருகிறார்கள் என்று சொல்லலாம்.