அம்சரிலிருந்து பந்த்ரா டெர்மினஸ் செல்லும் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலில், ஒரு பயணியிடம் 20 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தண்ணீரைப் குடித்துப் பார்த்தபோது, அது மிகவும் அசுத்தமாகவும் குடிக்க முடியாத வகையிலும் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணி, வியாபாரியிடம் சென்று இவ்வளவு மோசமான நீரை 20 ரூபாய்க்கு விற்பனை செய்வது முறையா என்று முறையிட்டார். அதற்கு அந்த வியாபாரி, “நாங்கள் குடிநீரைத் தயாரித்து வழங்குவதில்லை, மேலே இருந்து வரும் தண்ணீர் அப்படித்தான் வருகிறது, இதில் எங்கள் தவறு என்ன?” என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.
இதைக் கேட்டு அதிர்ந்த பயணி, நீரை விற்கும் நீங்கள்தான் அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அடிமட்ட விலையான 14 ரூபாய் தண்ணீரை 20 ரூபாய்க்கு விற்றுவிட்டு மோசமான தரத்திற்கு நியாயம் பேசுவதாகவும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், வியாபாரிகளோ தாங்களே பாட்டில்களில் அடைத்து விற்கும் இத்தகைய கலப்படச் செயலை நியாயப்படுத்திவிட்டு, “எங்கு வேண்டுமானாலும் புகார் அளியுங்கள், எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று அலட்சியமாகக் கூறினர்.
