CINEMA
கட்டிடம் கட்ட மாஸ்டர் பிளான் போட்ட நடிகர் சங்கம்.. இதைத்தான் தல அஜித் அன்னைக்கே சொன்னாராம்..
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது கட்டமைப்பும் ஆளுமையும் மிகப் பிரமாதமாக இருந்தது. விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இறங்கிய பின் பல சர்ச்சைகள் சங்கத்தின் மேலும் பல பிரச்சினைகளும் வந்து விழுந்து கொண்டுதான் இருக்கிறது, அந்த வகையில் சில நாட்களாகவே நடிகர் சங்கம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதில் மிகப்பெரிய பிரச்சனையும் பணம் பற்றாக்குறையும் வந்து கொண்டு தான் இருக்கிறது,
அதற்கான பணமும் திரட்டி எப்படியாவது சங்கத்தை கட்டிவிட வேண்டும் என்று முயற்சி செய்தும் இன்னுவரையும் அதற்கு ஒரு விடிவு காலம் வரவே இல்லை, ஆனால் தற்போது சங்கத்தில் இருப்பவர்கள் ஒரு முடிவு செய்து உள்ளார்களாம், தமிழ் சினிமாவில் உள்ள மிகப்பெரிய நடிகர் நடிகைகளிடம் தலா ஒரு கோடி அளவில் பணத்தை திரட்டி ஆக மொத்தம் 20 பேரிடம் பணத்தை வாங்கி அந்த பணத்தை வைத்து சங்கத்தை கட்டி விடலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். முதல் முதலில் அரசியல்வாதியும் நடிகருமான உதயநிதி அவர்களிடம் கேட்டபோது, அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு கோடி ரூபாயை தூக்கி தந்துள்ளார், இவர் தான் நடிகர் சங்கத்தை கட்டுவதற்கான பணத்தை முதல் முதலில் தந்துள்ளார்,
இவரே தந்துவிட்டார் இதை பார்த்த மற்ற நடிகரும் கண்டிப்பாக இதற்காகவே தந்தாக வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்பட்டு விட்டது, அந்த வகையில் அஜித், ரஜினி, கமல், விஜய் அவர்கள் சங்கத்தின் பண திரட்டலுக்கான நன்கொடை தருவார்களா என்று பல சர்ச்சைகள் எழும்பி வருகிறது. இந்த வகையில் விஜயகாந்த் அவர்கள் தலைவராக இருந்த போது பணம் திரட்டுவதற்காக வெளிநாடு சென்ற போது நடிகர் அஜித் அவர்கள் விஜயகாந்த் ஏன் நம்மளே பணத்தை திரட்டி செலவை முடித்து விடலாமே, எதற்காக வெளிநாடு சென்று அங்கு தமிழரிடம் பணத்தை திரட்டி சேர்க்க வேண்டும்? அவர்களே வெளிநாடு செல்வதே பிழைப்பதற்காக தான், அவர்களிடம் எதற்காக கேட்க வேண்டும் என்று அஜித் சொன்னாராம்,