BREAKING: இவர்களுக்கு பொங்கல் பணம் ரூ.3000 கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு..!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தகுதியான பயனாளிகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின்படி, சர்க்கரை அட்டைதாரர்கள் (White Card) மற்றும் எவ்விதப் பொருட்களும் வாங்காத பொருளில்லா அட்டைதாரர்களுக்கு (NC – No Commodity Card) ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்படாது. மற்றபடி, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) அட்டைதாரர்கள் எனப் பெரும்பான்மையான ரேஷன் கார்டுகளுக்கு இந்த ரொக்கப்பணம் நேரடியாக நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். உங்கள் கார்டு வகையைச் சரிபார்க்க TNEPDS அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தலாம்.