விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த 2026 பொங்கல் பண்டிகைக்குப் புதிய படங்கள் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, புதிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸைத் தள்ளிவைப்பதாகத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. விஜய்யின் அரசியலில் வருகைக்குப் பிறகு அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
