டிட்வா புயல் எதிரொலி: நாளை திறனாய்வு தேர்வு கிடையாது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்த திறனாய்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2024 -2025ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் என்ற கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தமிழக அரசு பாடத்திட்டத்தின் படி 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் தேர்வு இருத்தாள்களாக நடத்தப்படும். இந்நிலையில் நாளை தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு  நடைபெறவிருந்த நிலையில் ‘டிட்வா’ புயல் காரணமாக டிச.6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.