பென்ஷனுக்காக போன உயிர்… “திடீர் வெள்ளப்பெருக்கு…” கண் இமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… ஆற்றில் அடித்துச் சென்ற பெண்… நெஞ்சை உலுக்கிய கோரச் சம்பவம்…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

நிர்மல் மாவட்டம் கானாபூர் மண்டலம் எருவசிந்தல்லோ பகுதியில் பெய்த கனமழையால் பல்லிவாகு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாமனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மர்சுகோலா பருபாய் (வயது 45) என்பவர் தனது அரசு பென்ஷன் பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் வழியில், இந்த ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டார்.

https://twitter.com/pulsenewsbreak/status/2082669155568796068/photo/1

   

ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பீதியால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகம் நிலவி வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினரும் அதிகாரிகளும் தீவிர தேடுதலுக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலைக் கண்டெடுத்தனர். தாயை இழந்த குடும்பத்தினரின் துயரம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.