அதிமுகவில் மூடப்பட்ட கதவுகள்… முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் + சசிகலா…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேசியத் தலைவர்களைச் சந்திக்க டெல்லி சென்றிருந்த அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக ஒரு வலுவான மற்றும் தெளிவான பாதையில் பயணிப்பதாகவும், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் அல்லது துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிரடியாகக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு, சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு மீண்டும் இணைய முயற்சிப்பதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், 2026 தேர்தலை தனது தலைமையிலான ஒற்றைத் தலைமையின் கீழ் சந்திக்க அதிமுக முழுத் தயார் நிலையில் இருப்பதை இந்த டெல்லிப் பயணம் மற்றும் அவரது பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது.