பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் எச்.ஏ.எல் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இரவு விருந்து கொண்டாடியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிக சத்தத்துடன் நடனமாடியதால், அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ரோந்து போலீசார் அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். விடுதி அறைக்குள் நுழைந்த காவலர்கள், அங்கிருந்த இளைஞர்களைக் கைது செய்துவிடுவதாக மிரட்டிப் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முன்வந்தும், போலீசார் ரொக்கமாகவே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்தத் தொடர் மிரட்டலால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், பயத்தில் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். மகளின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள் யார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…