பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் எச்.ஏ.எல் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இரவு விருந்து கொண்டாடியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிக சத்தத்துடன் நடனமாடியதால், அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ரோந்து போலீசார் அங்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். விடுதி அறைக்குள் நுழைந்த காவலர்கள், அங்கிருந்த இளைஞர்களைக் கைது செய்துவிடுவதாக மிரட்டிப் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முன்வந்தும், போலீசார் ரொக்கமாகவே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் அங்கிருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்தத் தொடர் மிரட்டலால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், பயத்தில் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். மகளின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள் யார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…