செயற்கை கால்கள் கூட இல்லை..! கைகளின் பலத்தால் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட உலகின் முதல் மாற்றுத்திறனாளி வீரன்.. பாராட்டித் தள்ளும் இணையவாசிகள்..!

Spread the love

ரஷ்யாவைச் சேர்ந்த மலையேற்ற வீரரான ருஸ்தம் நபீவ், எந்தவொரு செயற்கைக் கால்களும் இல்லாமல், வெறும் கைகளின் பலத்தைக் கொண்டு உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,848.86 மீட்டர்) தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மே 20, 2026 அன்று காலை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ரஷ்யக் கொடியை ஏற்றிய இவர், செயற்கைக் கால்கள் இன்றி வெறும் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் மலையேற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். எவரெஸ்ட்டின் மிக ஆபத்தான ‘கும்பு பனிப்பாறை’ (Khumbu Icefall) பகுதியைக் கடந்து கேம்ப்-1 பகுதியை அடைய இவருக்கு 15 மணிநேரம் ஆகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

ருஸ்தம் நபீவின் இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சோகம் மறைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவ முகாம் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி, ருஸ்தம் தனது இரண்டு கால்களையும் நிரந்தரமாக இழந்தார். இந்த கோர விபத்து அவரது வாழ்க்கையை முடக்கிய போதிலும், அவர் சக்கர நாற்காலியோடு முடங்கிப் போக விரும்பவில்லை. தனது ஊனத்தை ஒரு தடையாகக் கருதாமல், மன உறுதியோடு மலைகளின் சிகரங்களை சவாலாக ஏற்று கைகளின் உதவியுடன் மலையேறத் தொடங்கினார். இதற்கு முன்பாக இவர் உலகின் 8-வது மிக உயர்ந்த மலையான ‘மனாஸ்லு’ மற்றும் ஐரோப்பாவின் ‘எல்ப்ரஸ்’ மலையையும் வெறும் கைகளால் ஏறி சாதனை படைத்துள்ளார்

எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிறகு, ருஸ்தம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்த வெற்றியை என்னை உற்றுநோக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த உலகிற்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், நம் உடலில் இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராட வேண்டும்; ஏன்னெனில், அதற்கான முயற்சி எப்போதும் வீண் போகாது” என்று குறிப்பிட்டுள்ளார். மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ள இவருடைய விடாமுயற்சியும், அசாத்திய துணிச்சலும் இன்று உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Swetha

Recent Posts

“இந்த ஜென்மத்தில் அவளை விடமாட்டேன்!”.. மருமகளை மனைவியாக்கிய தந்தை… பாதியிலேயே நின்ற மகனின் திருமணம்… உறைந்து போன குடும்பம்..!!!

குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…

6 minutes ago

“நான் தான் உங்க தாய்மாமான்” விஜய்யின் செண்டிமெண்ட் அரசியல்… கிழித்தெடுத்த நயினார் நாகேந்திரன்…!

"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…

13 minutes ago

“காப்பாற்ற யாருமே இல்லை!”.. வாட்டர் பார்க்கில் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்.. கதறும் பெற்றோர்.. பின்னணியில் இருக்கும் வாட்டர் பார்க் அலட்சியம்..!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…

21 minutes ago

அதிமுகவில் திடீர் திருப்பம்: EPS-உடன் தூதுவிடும் SP வேலுமணி..! இரு தரப்பும் போட்ட அதிரடி கண்டிஷன்கள்—ஒன்றுசேருமா கட்சி..?

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி (EPS) உடன் மீண்டும் இணைய எஸ்பி வேலுமணி (SP…

28 minutes ago

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் எப்போது..? அமைச்சர் தமிழன் பார்த்திபன் கொடுத்த அதிரடி அப்டேட்..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது…

32 minutes ago

இரவில் படுக்கைக்குள் சுருண்டு கிடந்த அந்த ‘கொடிய’ விஷயம்!… விடிந்ததும் நீல நிறமாக மாறிய 2 குழந்தைகளின் உடல்.. கதறிய பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

பீகாரில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், கேட்பவர் எவரையும் உறைந்து போகச் செய்யும். ஒரே படுக்கையில் ஒன்றாக ஆசையாய்…

33 minutes ago