மஹாராஷ்ட்ரா மாநிலம் பத்லாபூரில் கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய 4 வயது சிறுவன், அருகில் இருந்த தன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று “அம்மா இறந்துவிட்டார்” என்று கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அந்த காரை நோக்கி ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு காருக்குள் அச்சிறுவனின் தாயான மனிஷா போஸ்லே மற்றும் காரின் ஓட்டுநர் இருவரும் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்துபோயினர்.
தகவலறிந்து வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுநர் கணேஷ் ஷிண்டே என்பது தெரியவந்துள்ளது. சிறுவன் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், சம்பவ இடத்தின் சூழலை வைத்தும், ஓட்டுநர் கணேஷ் முதலில் மனிஷாவைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அதே ஆயுதத்தால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த மனிஷாவின் உறவினர்கள் தங்களுக்கு இந்த ஓட்டுநர் கணேஷை இதற்கு முன்பு யாரென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் மனிஷாவுக்கும் ஓட்டுநருக்கும் இடையே என்ன மாதிரியான தொடர்பு அல்லது பகை இருந்தது என்பதை அறிய போலீசார் கணேஷின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உண்மைப் பின்னணியைக் கண்டறிய இருவரின் மொபைல் போன் அழைப்புகளும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…