கோயில் பிரசாதம்னு கொடுத்தா நம்பாதீங்க…! சென்னை பெண்களை குறிவைத்து நூதன மோசடி…! ஆன்லைன் கேமால் திருடியாக மாறிய பெண்… பகீர் சம்பவம்…!!

Spread the love

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கோயில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த பால்கோவாவை கொடுத்து பெண்களிடம் நகை திருடிய ரவணம்மா என்ற பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகி பல லட்சங்களை இழந்த இவர், அந்தக் கடனை அடைப்பதற்காக இந்த நூதன திருட்டு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

 வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, இனிப்பு கொடுத்து அவர்கள் மயங்கியதும் நகைகளை அபேஸ் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இவரிடமிருந்து சுமார் 19.5 சவரன் தங்க நகைகளை ஜாம்பஜார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையில், ரவணம்மா ஏற்கனவே கொடியரசி என்ற பெண்ணிடம் 21 சவரன் நகைகளை இதே பாணியில் திருடியது அம்பலமானது. தற்போது சுஜாதா என்பவரிடம் 6 சவரன் நகையைப் பறிக்க முயன்றபோது கச்சிதமாகப் பிடிபட்டார். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், யாரையும் சந்தேகத்திற்கிடமாக வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

6 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

16 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

30 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

31 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

33 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

38 minutes ago