“என் புருஷன், பிள்ளைகளுக்கு உடம்பு சரி இல்ல…ப்ளீஸ் .விட்ருங்க..”பையை திருடி விட்டு அழுத பெண்… பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

Spread the love

பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு பெண், நடத்துநர் பயணிகளுக்குத் பயணச்சீட்டு வழங்குவதில் மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, அங்கிருந்த என்ஜின் மீது வைக்கப்பட்டிருந்த அவரது பணப்பையை நைசாகத் திருடித் தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளார். பணியை முடித்துவிட்டு வந்து பார்த்த நடத்துநர், தனது பணப்பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சக பயணிகளிடம் விசாரித்தபோது, அந்தப் பெண் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் நடத்துநர் அவரிடம் கேட்டபோது, தான் எதையும் எடுக்கவில்லை என்று கூறி அந்தப் பெண் நாடகமாடியுள்ளார்.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்த பெண் போக்குவரத்துக் காவலருக்குத் தகவல் கொடுத்தார். அந்தப் பெண் காவலர் வந்து சோதனையிட்டபோது, திருடப்பட்ட நடத்துநரின் பணப்பை அந்தப் பெண்ணின் பையிலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பெண், தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், குழந்தைகள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்றும் கூறி தன்னை விட்டுவிடுமாறு அழுது புலம்பி நாடகமாடியுள்ளார். இருப்பினும், நடத்துநரும் காவலரும் சேர்ந்து அவரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“யார் சாமி நீ… 3 நாள் ஃபர்ஸ்ட் மனைவி… 3 நாள் செகண்ட் மனைவி… 1 நாள் லீவ்…!” – 2 மனைவிகளுடன் கணவன் வாழ… பஞ்சாயத்து போட்ட வினோத கண்டிஷன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…

13 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! நடைபாதைக்குள் புகுந்த சொகுசு கார்…. வாலிபர் துடிதுடித்து பலி…! நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…

13 minutes ago

நீட், நெட் முறைகேடுகளால் வெடித்த போராட்டம்… 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு…! மத்திய அரசை தோலுரித்த ராகுல் காந்தி…!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…

23 minutes ago

அதிர்ச்சி…! ஜே.சி.பி ஏறி இறங்கி கொடூர விபத்து… மேலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வின் மகன் துடிதுடித்து பலி…! சென்னையில் சோகம்…!!

சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…

27 minutes ago

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பதற்றம்…! “ஒரு அடி நகர்ந்தால் டெஹ்ரானை தரைமட்டமாக்குவோம்…” செக் வைத்த அமெரிக்க அதிபர்…. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்…!!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…

33 minutes ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…

38 minutes ago