பட்டியலின பெண் என்பதால் நான் சமைக்கக்கூடாதா..? பள்ளியில் சாதிய பாகுபாடு… மனம் நொந்து பேசிய சத்துணவு பணியாளர்…!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றும் நிரோஷா என்ற பட்டியலினப் பெண்ணுக்கு எதிராக சாதி பாகுபாடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.   குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என்று கூறி, சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியை, நிரோஷாவை வேலையை விட்டு நிற்குமாறும், இல்லையெனில் பணிநீக்கம் செய்ய நேரிடும் என்றும் மிரட்டியதாக நிரோஷா புகார் அளித்துள்ளார். அவர் விடுப்பில் இருந்தபோது, அவருக்குப் பதிலாக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. “பட்டியலின பெண் என்பதால் நான் சமைக்கக்கூடாதா?” என்று மனவேதனையுடன் கேள்வி எழுப்பிய நிரோஷா, இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

   

இந்தப் புகாரைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாதி பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்