கரூர் துயர் சம்பவம் விவகாரத்தில் பணத்திற்காக வழக்கு தொடர்ந்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார். விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 வயது பிரித்திக் என்ற சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பெயரில், அமன் மாலிக் என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தாங்கள் தொடரவில்லை என்றும், இதற்கும், தங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று சிறுவன் பிரித்திக் தாய் ஷர்மிளா கூறியுள்ளார். மேலும், கணவரை பிரிந்து 8 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், பணத்திற்காக அவர் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
