உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மோனிகா என்ற பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று அவரது அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில், “நான் உன்னை காதலிக்கிறேன் கணவரே, முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். ஒருவன் என்னை பிளாக்மெயில் செய்கிறான், அதனால் நான் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று மோனிகா தனது வேதனையைப் பதிவிட்டுள்ளார்.
மோனிகா இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பு, தனது பிறந்த வீட்டிற்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அவர் அழுதுகொண்டே பேசியபோதும், கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் சாதாரண சண்டையாக இருக்கும் என்று கருதிய குடும்பத்தினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியில், தனது இரண்டு மகள்கள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த போதே மோனிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
