3 நாள் சாம்பாரை சூடுபடுத்திய மனைவி, ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்… பெங்களூருவில் 27 வயது இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு… பின்னணியில் அதிர்ச்சி காரணம்…!!!

By Rajeshwari on பங்குனி 7, 2026

Spread the love

பெங்களூருவில் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறிய விவகாரத்தில் ஏற்பட்ட அற்பக் குடும்பத் தகராறு, 27 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த காவ்யா என்பவருக்கும் ரங்கசாமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று, மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட சாம்பாரை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறியது தொடர்பாகத் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்தச் சாதாரண விவாதம் முற்றிய நிலையில், ரங்கசாமி தன் மனைவியைக் கடுமையான சொற்களால் நிந்தித்ததோடு, அவரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

   

இதனால் கணவரின் இத்தகைய போக்கால் மனமுடைந்த காவ்யா, ஆத்திரத்திலும் வேதனையிலும் விவசாயப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததைக் கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

   

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காவ்யாவின் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒரு சிறிய சமையல் விவகாரம் தற்கொலை வரை சென்றதற்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.