Categories: சினிமா

அத பத்தி யோசிச்சே வாழ்க்கை போகுது.. இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலைகள் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இப்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காலைல எழுந்த உடனே நம்ம யோசிக்கிறது பிரச்சனைய பத்தி தான். தினமும் பிரச்சனை பற்றியே யோசிச்சிட்டு இருந்துட்டு ராத்திரி கனவில் பிரச்சனை பத்தி தான் யோசிக்கிறோம். இதுதான் எல்லாருடைய வாழ்க்கையாகவும் இருக்கு. அவன் அப்படி பண்ணி இருப்பானோ? இவன் இப்படி பண்ணி இருப்பானோ? அது இந்த மாதிரி போயிருக்குமோ எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு மூச்சு திணற மாதிரி பிரச்சனையை பத்தி மட்டும் தான் யோசிக்கிறோம்.

 

ஒரு சத்தியமான உண்மைய சொல்லனும்னா பிரச்சனை அப்படிங்கறது நம்ம மைண்டோட இமேஜினேஷன். நாட்கள் போக போக பிரச்சனை தானா சால்வ் ஆகிடும். அப்போ இதுவரைக்கும் மனச போட்டு அலைக்கழிக்க வைத்தது எல்லாம் வேஸ்ட் தான். பிரச்சனை முடிஞ்சு போச்சு அப்படின்னா கூட உடனே மனசு குதிச்சு வந்து அடுத்து பத்தாயிரம் பிரச்சனையை மூஞ்சில தள்ளும். இதுக்கு என்ன பண்றது? ஒண்ணுமே பண்ண முடியாது. உங்க வீட்ல பூஜை ரூம் இருக்கும். கொஞ்சம் எட்டி பூஜை ரூம பாருங்க. கடவுள் படுத்துகிட்டே உங்களை பார்த்துட்டு இருப்பார். இதெல்லாம் என் பிரச்சனை.

நான் பாத்துக்குறேன்டா போய் உன் வேலையை பாருடா அப்படின்னு அவரு டெய்லி சொல்லிட்டு தான் இருப்பார். நீங்க அதை காது கொடுத்து கேட்பதில்லை. உன்ன படைச்சுட்டு உனக்கு இந்த ரோல்ன்னு நான் போட்டு வச்சிருக்கேன். நீ எதுக்கு அனாவசியமா இது அதுன்னு மனசு போட்டு நோண்டிக்குற அப்படின்னு அவர் கத்தி கத்தி பாக்குறாரு. நம்ம கேக்குறது இல்ல. நீங்க பாட்டுக்கு மொத்த பிரச்சனையையும் அவர் தலையில் போட்டுட்டு உங்க வேலைய பாருங்க என பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

1 minute ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

11 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

21 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

26 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

31 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

36 minutes ago