அன்று நான் செய்த தவறு… பாரதிராஜாவின் இயக்கத்தில் விஜய் நடிக்காததற்கு இதுதான் காரணமா..? பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை…!!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் விஜய்யை ஆரம்பகாலத்தில் நிராகரித்ததாக அவரே உருக்கமாகப் பேசிய பழைய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமான பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு அண்மையில் அரச மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நடந்து முடிந்த நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகனை ஒரு கிராமத்துப் படத்தில் நடிக்க வைக்குமாறு பாரதிராஜாவிடம் கேட்டபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து அனுப்பிய நிகழ்வை இந்த வீடியோவில் பாரதிராஜா விவரித்துள்ளார்.

அந்தக் காணொளியில் பேசிய பாரதிராஜா, “எஸ்.ஏ. சந்திரசேகர் அவரது மகன் விஜய்யை என்னிடம் கூட்டிவந்து, உன்னுடைய கிராமத்துப் படத்தில் நடிக்க விஜய் ஆசைப்படுகிறான் எனக் கூறினார். ஆனால், அப்போது எனக்கு அந்தப் பையன் வேண்டாம் என்று தோன்றியது; நீயே உன் மகனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டியதுதானே என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். தான் அன்று செய்த தவறை ஒப்புக்கொண்ட பாரதிராஜா, அன்று தன்னால் நிராகரிக்கப்பட்ட விஜய், இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோவாக உயர்ந்திருப்பதை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

மேலும், இந்த நிராகரிப்பு குறித்து விஜய்யிடமே தான் நேரடியாகப் பேசியதாகவும் பாரதிராஜா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். “உன்னை அன்று நான் வேண்டாம் என்று அனுப்பிவிட்டேன்” என பாரதிராஜா கூறியதற்கு, விஜய் மிகவும் முதிர்ச்சியோடு, “நீங்கள் என்னை ரிஜெக்ட் செய்தது என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று பதிலளித்ததாக பாரதிராஜா உருக்கமாகப் பேசியுள்ளார். ஒரு மாபெரும் இயக்குநரின் நிராகரிப்பைத் தாண்டி, விஜய் இன்று அடைந்துள்ள இமாலய வளர்ச்சி அவரது ரசிகர்களால் இந்த வீடியோவின் மூலம் பெருமையோடு கொண்டாடப்பட்டு வருகிறது.