காட்டுத்தீயாய் பரவும் இளைஞர்கள் கொலை வீடியோ… பதறிப்போன கடலூர்… போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு பதற்றமான வீடியோ அதிவேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் பயங்கரமான மோதலில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையப் பக்கங்களில் நெட்டிசன்களால் காட்டுத்தீயாய் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்துக் கடலூர் மாவட்டக் காவல்துறையினர் உடனடியாகத் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டனர். அதன்பின், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

   

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைச் பகிர்ந்து வரும் சிலர், “சிதம்பரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர படுகொலை” என்ற தவறான வதந்தியைக் கிளப்பிவிட்டனர். இளைஞர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகப் பரவிய இந்தத் தகவல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியது. வதந்திகள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, காடாம்புலியூர் காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்தனர்.

   

காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், அங்கு கொலைச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அது குடிபோதையில் ஏற்பட்ட ஒரு சாதாரணத் தகராறு என்றும், இந்த மோதல் தொடர்பாக மோகன், கௌதம், சூர்யா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீசார், பொதுமக்கள் யாரும் இத்தகைய உண்மைக்குப்புறம்பான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.